தகுதியை நிர்ணயம் செய்வது எப்படி?
கேள்வி: 9 மற்றும் 11-ம் வகுப்பிற்கான பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுமா?
ப: அனைத்துத் தேர்வுகளையும் ரத்து செய்துவிட்டால் அந்த மாணவனின் தகுதியை எப்படி நிர்ணயம் செய்வது? அப்படிச் செய்தால் மாணவர்கள் வெளியில் சென்று வேலை பார்க்க முடியாத சூழ்நிலை உருவாகிவிடும். தேர்வு வைத்தால் தான், அந்த மாணவனின் தகுதியை ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் அறிந்துகொள்ள முடியும். பெற்றோருடைய கோரிக்கையை ஏற்று 5 மற்றும் 8-ம் வகுப்பிற்கான பொதுத் தேர்வை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ரத்து செய்திருக்கிறார்.
இடைநிற்றலை தவிர்க்க நடவடிக்கை
கே: 9, 10-ம் வகுப்பு மாணவர்கள் இடைநிற்றல் குறித்து பல்வேறு அரசியல் கட்சிகள் கருத்து தெரிவிக்கின்றனரே?
ப: இடைநிற்றல் குறித்த புள்ளிவிவரங்களை எவரும் தெரிவிக்கவில்லையே. அவ்வாறு பேசுவது உண்மையல்ல. 9 மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்கள் இடைநிற்றலைத் தவிர்ப்பதற்கு அரசால் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு முதல்-அமைச்சர் பதில் அளித்தார்.